கொழும்பு – கண்டிக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள்
அடுத்த வருடம் மே மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
தெரிவித்துள்ளார்.
2013ம் ஆண்டில் நாடு முக்கிய அபிவிருத்திப் பணிகள் பலவற்றில் தடம்பதிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பஹத்ததும்பர பிரதேச சபை கட்டடத்தை இன்று (29) திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
சொத்துக்களை விற்று நாட்டை அபிவிருத்தி செய்ய தாம் ஒருபோதும் தயாரில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
முறையான வேலைத் திட்டத்தின் கீழ் நாடு அபிவிருத்தி கண்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment